த் 1ரிவித4ம் நரக1ஸ்யேத3ம் த்3வாரம் நாஶனமாத்1மன: |
கா1ம: க்1ரோத4ஸ்த1தா2 லோப4ஸ்த1ஸ்மாதே3த1த்1த்1ரயம் த்1யஜேத்1 ||21||
த்ரி-விதம்--—மூன்று வகையான; நரகஸ்ய---—நரகத்தின்; இதம்--—இது; த்வாரம்---—வாயில்கள்; நாஶனம்---— அழிவிற்கு; ஆத்மனஹ--—சுய; காமஹ---—காமம்; க்ரோதஹ---—கோபம்; ததா---—மற்றும்; லோபஹ----—பேராசை; தஸ்மாத்---—எனவே; ஏதத்--—இவை; த்ரயம்---—மூன்றை; த்யஜேத்--—கைவிட வேண்டும்.
BG 16.21: காமம், கோபம் மற்றும் பேராசை - ஆன்மாவிற்கு சுய அழிவின் நரகத்தில் இட்டுச் செல்வதற்கான மூன்று வாயில்கள் உள்ளன. எனவே, மூன்றையும் கைவிட வேண்டும்.
ஸ்ரீ கிருஷ்ணர் இப்போது அஸுர மனப்பான்மையின் தோற்றத்தை விவரிக்கிறார், மேலும் காமம், கோபம் மற்றும் பேராசை ஆகியவற்றை அதற்கு மூன்று காரணங்களாக சுட்டிக்காட்டுகிறார். முன்னதாக, வசனம் 3.36 இல், அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணரிடம், மக்கள் ஏன் பலவந்தமாக, விருப்பமில்லாமல், பாவம் செய்யத் தூண்டப்படுகிறார்கள் என்று கேட்டிருந்தார். ஸ்ரீ கிருஷ்ணர், கோபமாக மாறும் காமம், உலகின் அனைத்தையும் விழுங்கும் எதிரி என்று அதற்குப் பதிலளித்தார். 2.62 வசனத்தின் விளக்கத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளபடி, பேராசை என்பது காமத்தின் நிலைமாற்றமாகும். காமம், கோபம், மற்றும் பேராசை ஆகிய மூன்றும் அஸுர தீமைகள் உருவாகும் அடித்தளமாகும். அவர்கள் மனதில் பதிந்து, மற்ற எல்லா தீமைகளும் வேரூன்றுவதற்கு ஏற்ற இடமாக மாறுகிறது. இதன் விளைவாக, ஸ்ரீ கிருஷ்ணர் அவர்களை நரகத்திற்கான நுழைவாயில்கள் என்று முத்திரை குத்துகிறார் மற்றும் சுய அழிவைத் தவிர்க்க இவற்றைத் தவிர்க்குமாறு கடுமையாக அறிவுறுத்துகிறார். நலன் விரும்புபவர்கள் அஞ்சுதற்கேதுவான இந்த மூன்றையும் அவர்களின் சொந்த ஆளுமையில் இருப்பதை கவனமாக தவிர்க்க வேண்டும்.
த் 1ரிவித4ம் நரக1ஸ்யேத3ம் த்3வாரம் நாஶனமாத்1மன: |
கா1ம: க்1ரோத4ஸ்த1தா2 லோப4ஸ்த1ஸ்மாதே3த1த்1த்1ரயம் த்1யஜேத்1 ||21||
காமம், கோபம் மற்றும் பேராசை - ஆன்மாவிற்கு சுய அழிவின் நரகத்தில் இட்டுச் செல்வதற்கான மூன்று வாயில்கள் உள்ளன. எனவே, மூன்றையும் கைவிட வேண்டும்.
Sign in to save your favorite verses.
Sign Inపవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్కు చేరుతుంది!
Welcome 🙏
Here's what you've unlocked
Bookmarks
Save verses for quick return
Notes
Write your own reflections
Progress
Track all 18 chapters
Verse of the Day
A new shloka in your inbox daily